வேலூரில் திமுகவை தோற்கடிக்க வலுவான வேட்பாளரை களமிறக்கிய அதிமுக... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

By Thiraviaraj RMFirst Published Jul 6, 2019, 12:19 PM IST
Highlights

வேலூர் மக்களவை தேர்தலில் ஏற்கெனவே ஏ.சி.சண்முகம் போட்டியிட்டு இருந்த நிலையில் மறு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 

வேலூர் மக்களவை தேர்தலில் ஏற்கெனவே ஏ.சி.சண்முகம் போட்டியிட்டு இருந்த நிலையில் மறு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்பு திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி சார்பில் புதிநீதிக்கட்சி தலைவர் ஏ.சிசண்முகமும் போட்டியிட்டனர். பணப்பாடுவாடா புகாரால் வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் தனகே சீட் கிடைக்கும் என தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டார் ஏ.சி.சண்முகம். இந்நிலையில் அதிமுக மீண்டும் ஏ.சி.சண்முகத்தை தங்களது கூட்டணி வேட்பாளராக அறிவித்துள்ளது. 37 தொகுதிகளில் கோட்டை விட்ட அதிமுக வேலூர் தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்கிற வேட்கையுடன் தயாராகி வருகிறது. பாஜகவும் வேலூர் தொகுதி மீது கண் வைத்துள்ளது. 

திமுக வேட்பாளரை வெல்ல வேண்டுமானால் பணத்த்திலும் மக்கள் செல்வாக்கும் உள்ள ஒருவர் களமிறக்கப்பட்ட வேண்டும் என்கிற நிலையில் ஏ.சி.சண்முகம் மீண்டும் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக தங்களது வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. 

click me!