முரசொலி நிலம் குறித்து ஏதாவது நான் சொல்லியிருக்கலாம்... அதற்காக இப்போது கோத்துவிடுவதா..? பொன்னார் மீது வைகோ காட்டம்!

By Asianet TamilFirst Published Oct 24, 2019, 10:20 PM IST
Highlights

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் முரசொலி இடம் குறித்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பற்றி எரியும் எத்தனையோ பிரச்னைகளைத் திசை திருப்ப சிலர் முயல்கிறார்கள். இதுபோன்ற மத்திய பாஜக அரசின் தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகங்களை மக்கள் மன்றத்தில் திசை திருப்புவதற்காக திமுக. மீது சிலர் உள்நோக்கத்தோடு கணைகள் வீசுவதை தமிழக மக்கள் நன்றாக உணர்வார்கள்.
 

முரசொலி நில விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து திசைதிருப்பும் முயற்சி எனத் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
முரசொலி நிலம் தொடர்பாக பாமக - திமுக இடையே லடாய் ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பொன். ராதாகிருஷ்ணன், “முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். இந்நிலையில் இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
 “பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று நான் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார். அப்போதைய சூழ்நிலையில் நான் அதுபோன்று கருத்து தெரிவித்து இருக்கலாம். ஆனால் அக்கருத்து தவறானது என்பதை பின்னர் உணர்ந்தேன். 
தற்போது இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டு இருப்பதால் திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மிகத்தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். முரசொலி அலுவலக இடம் பற்றிய அரசுப் பதிவு ஆவணங்களை வெளியிட்டது மட்டுமன்றி, அது பஞ்சமி நிலம்தான் என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் முரசொலி இடம் குறித்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பற்றி எரியும் எத்தனையோ பிரச்னைகளைத் திசை திருப்ப சிலர் முயல்கிறார்கள். இதுபோன்ற மத்திய பாஜக அரசின் தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகங்களை மக்கள் மன்றத்தில் திசை திருப்புவதற்காக திமுக. மீது சிலர் உள்நோக்கத்தோடு கணைகள் வீசுவதை தமிழக மக்கள் நன்றாக உணர்வார்கள்.
பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணையாக இருப்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் சக்தியைத் திரட்டும் மு.க.ஸ்டாலின் முயற்சியை எவராலும் தடுத்துவிட முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

click me!