சீமான் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது..! கோவை காவல்துறை அதிரடி..!

Published : May 09, 2020, 01:38 PM ISTUpdated : May 09, 2020, 01:41 PM IST
சீமான் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது..! கோவை காவல்துறை அதிரடி..!

சுருக்கம்

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்த்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசியது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சீமான் மீது தற்போது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் மீது ஏற்கனவே அரசுக்கு எதிராக பேசியதாக பல்வேறு வழக்குகள் காவல் துறையில் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேசியதற்காக சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அண்மையில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பரவுதல் தீவிரமடைந்ததை தொடர்ந்து அப்போராட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே கோவை ஆத்துப்பாலம் அருகே பிப்ரவரி 22 ஆம் தேதி இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்குபெற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்த்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.

இது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சீமான் மீது தற்போது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேசத்துரோகம், உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் சீமான் மீது வழக்கு பதியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு