எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனை எம்எல்ஏக்கள்  ஆதரவு ? இன்று நடைபெறும் கூட்டத்தில் தெரியும் !!!

Asianet News Tamil  
Published : Sep 05, 2017, 07:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனை எம்எல்ஏக்கள்  ஆதரவு ? இன்று நடைபெறும் கூட்டத்தில் தெரியும் !!!

சுருக்கம்

Today admk mla meeting...edappadi palanisamy

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தங்களது ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்,டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ்  உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் எடப்பாடிக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதற்காக அதிமுக பொதுக்குழு வருகிற 12ம் தேதி காலை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள வாரு கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இது தொடர்பான  கருத்து கேட்பு கூட்டம் கடந்த மாதம் 28ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் என சுமார் 250 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 28ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சுமார் 80 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.


அதிமுகவில் மொத்தம் 135 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு 21 எம்ல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மீதமுள்ள 3 கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், சபாநாயகர் தவிர மொத்தம் 110 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு தற்போது ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஆட்சிக்கு மெஜாரிட்டி தேவை என்றால் 117 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும். தற்போது 110 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதால் எடப்பாடி தலைமையிலான அரசு மைனாரிட்டி அரசாக உள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் 21 எம்எல்ஏக்கள் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் தொலைபேசி மூலம் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் முடிவடைந்ததும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் சோழவம்சத்தின் பெருமை..! வரலாற்றை அசிங்கப்படுத்திய ஒவைசி..!
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!