TN Local Body Election Result: அதிமுகவை துடைத்தெறிந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் கொண்டாடம்.

Published : Feb 22, 2022, 03:56 PM IST
TN Local Body Election Result: அதிமுகவை துடைத்தெறிந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் கொண்டாடம்.

சுருக்கம்

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். மேலும்  திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலினை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பல இடங்களில் அமோக வெற்றி பெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் அவரை கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். இதேபோல் திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, ஆடிப்பாடி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தம் 12601 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, பின்னர் வேட்பாளர்கள்  முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் அகற்றப்பட்டு  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . வழக்கம்போல சென்னை திமுகவுக்கு தான் என்பது ஓரளவுக்கு உறுதியாகி விட்டது, அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் திமுகவே ஆதிக்கம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.

காலை 9:30 மணி தகவலின்படி மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுகவே முன்னிலையில் உள்ளது.  பெற்றுள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஒரு மாநகராட்சியில் கூட இல்லை. 138 நகராட்சிகளில் 133 நகராட்சிகளில் திமுகவே முன்னிலையில் உள்ளது. அதிமுக 1 நகராட்சியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதேபோல் 489 பேரூராட்சிகளில் 417பேரூராட்சிகளில் திமுகவும், வெறும்9பேரூராட்சிகளில் மட்டுமே அதிமுகவும் முன்னிலையில் உள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கோவை, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளை யாகவது பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த இடத்திலும் அக்காட்சிக்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. இதனால் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர். மேலும்  திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலினை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வனத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ. ராசா, தயாநிதி மாறன் மற்றும் இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். எதிர்பார்த்ததை காட்டிலும் திமுக அமோக வெற்றி பெற்றிருப்பது முதல்வர் ஸ்டாலினை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!