வங்கியில் பணம் போடுபவர்கள், எடுப்பவர்கள் உஷார்... இந்த இரண்டு நாட்களுக்கு வங்கி இயங்காது

Asianet News Tamil  
Published : May 25, 2018, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
வங்கியில் பணம் போடுபவர்கள், எடுப்பவர்கள் உஷார்... இந்த இரண்டு நாட்களுக்கு வங்கி இயங்காது

சுருக்கம்

this month bank strike

வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் தங்களது ஊதியத்தை மாற்றி அமைக்க கோரி 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர். அதன்படி இந்த மாதம் 30, 31 தேதிகளில் வேலை நிறுத்தம் உண்டென அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிராங்கோ வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பண மதிப்பு நீக்கத்தின் போது 2 மாதம் நாள் முழுவதும் இரவு-பகலாக உழைத்தனர். 31 கோடி ஜன்தன் கணக்குகளை தொடங்கியதும் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துபவர்களும் இவர்கள் தான். ஆனால் அவர்களின் சம்பளம் மற்ற துறைகளில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகளைவிட குறைவாக உள்ளது.


வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சம்பள உயர்வு கடந்த 2017-ம் வருடம் நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஆனால் இதுவரை ஒப்பந்தம் நடக்கவில்லை.

பேச்சுவார்த்தையில் இந்தியன் வங்கிகள் சம்மேளனம் வழக்கத்திற்கு மாறாக இளநிலை மற்றும் நடுநிலை அதிகாரிகளுக்கு மட்டுமே சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் 2 சதவீதம் சம்பள உயர்வே சாத்தியம் எனவும் கூறினார்கள்.

இதனை கண்டித்து உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊதிய உயர்வு ஒப்பந்தம் எப்போதும் போல 7-வது நிலை வரை உள்ள அதிகாரிகளுக்கும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  ஒன்பது சங்கங்களின் கூட்டமைப்பான யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

உன் அழகில் மயங்கியே உன் கணவருக்கு வேலை கொடுத்தேன்..! அதிகாரியின் மனைவி மீது ஆசைப்பட்ட டிரம்ப் வீடியோ.!
கனிமக்கொள்ளையை தட்டிக்கேட்ட செய்தியாளர்கள் மீது தாக்குதல்.. திமுக MLA கைதாகணும்.. எதிர்க்கட்சிகள் ஆவேசம்!