
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காலையில் இருந்து பரபரப்பாக வெளியாகிக்கொண்டு இருக்கிறது. ஆளுமை திமுக கட்சி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இமாலய வெற்றிபெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 பேரூராட்சிகளில் தற்போது அவரது அனைத்து பேரூராட்சிகளிலும் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் நகராட்சிகளில் 137ல் 127ல் திமுகதான் முன்னிலை வகித்துக்கொண்டு இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் மொத்த வார்டுகள் எண்ணிக்கை 21 ஆகும். இதில் 1 வது வார்டு - திமுக, 2 வது வார்டு - திமுக, 3 வது வார்டு - திமுக, 4 வது வார்டு - சுயேட்சை, 5 வது வார்டு - சுயேட்சை, 6 வது வார்டு - ஜனதா தளம், 7 வது வார்டு - சுயேட்சை, 8வது வார்டு - பாஜக வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல் 9வது வார்டு - சுயேட்சை 10வது வார்டு -பாஜக, 11வது வார்டு - பாஜக, 12வது வார்டு - சுயேட்சை, 13வது வார்டு - சுயேட்சை, 14வது வார்டு - திமுக, 15வது வார்டு - பாஜக, 16வது வார்டு - திமுக, 17வது வார்டு -திமுக, 18வது வார்டு - திமுக, 19வது வார்டு - பாஜக, 20வது வார்டு - பாஜக, 21வது வார்டு - பாஜக வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்வாறு பல மாநகராட்சிகளில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது...அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பின், பாஜக எதிர்கொள்ளும் 2-வது தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.