கரும்பு , சர்க்கரையுடன் 1000 ரூபாய்...!! உடனே போங்க ரேஷன் கடைக்கு...!!!

Published : Jan 09, 2020, 12:30 PM IST
கரும்பு ,  சர்க்கரையுடன் 1000 ரூபாய்...!!  உடனே போங்க ரேஷன் கடைக்கு...!!!

சுருக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.   விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13ம்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .  

தமிழக அரசின் சார்பில் ஆயிரம் ரூபாய் தொகையுடன்  கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு ,  ரேஷன் கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது .  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது .   அதிமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பொங்கல் பரிசுடன் ரொக்கம்  பணமும் வழங்கப்படுகிறது.   

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த நவம்பர் மாதம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் .  குடும்ப அட்டைதாரர்களுக்கு  ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை ,  கரும்பு 20 கிராம் , முந்திரி 20 கிராம் ,  உலர் திராட்சை ,  ஏலக்காய் 5 கிராம் ,  உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது .  அத்துடன் 1000 ரூபாய் தொகையும் வழங்கப்படுகிறது .  இந்த பொங்கல் பரிசு தொகுப்பை இன்று முதல்  நியாயவிலைக் கடைகள் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது .  இன்று முதல் இந்த பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படுகிறது. 

வரும் 12ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குடும்ப அட்டைதாரர்கள்   பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.   விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் 13ம்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .  அரசின் இந்த அறிவிப்பால் நியாயவிலைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது .  பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் நியாயவிலை கடைகளுக்கு  விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!