‘சின்மயி ரூபத்தில் ஆண்டாள் வைரமுத்துவை பழிவாங்குகிறார்’... தமிழிசை டுமீல்!

By vinoth kumarFirst Published Oct 13, 2018, 10:04 AM IST
Highlights

வைரமுத்துவின் பொல்லாத நேரம் மேடம் தமிழிசை சாபம் விடுமளவுக்கு வந்து நிற்கிறது. ‘ஆண்டாளைப் பழித்த வைரமுத்துவை அதே ஆண்டாள் சின்மயி ரூபத்தில் பழிவாங்குகிறார்’ என்கிறார் தமிழிசை.

வைரமுத்துவின் பொல்லாத நேரம் மேடம் தமிழிசை சாபம் விடுமளவுக்கு வந்து நிற்கிறது. ‘ஆண்டாளைப் பழித்த வைரமுத்துவை அதே ஆண்டாள் சின்மயி ரூபத்தில் பழிவாங்குகிறார்’ என்கிறார் தமிழிசை. 

பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சத்யபிரமாணம் ஏற்கும் கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது தமிழிசை பேசுகையில்,’100 ஆண்டுகளாக தொன்று தொட்டு வரும் பழக்கம் மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 படி மத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும். அது இந்து மதத்திற்கும் பொருந்தும். எதிர்க்கட்சியினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிப்பது இல்லை. அவ்வளவு தீண்டத்தகாத மதமாகிவிட்டதா இந்து மதம்?. 

அதே போல் இந்துமதத்தை கொஞ்சமும் மதிக்காமல் ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்துவை அதே ஆண்டாள் சின்மயி என்ற பெண் ரூபத்தில் தோன்றி பழிவாங்கியிருக்கிறார். இனியாவது இந்துமதத்தை இழிவுபடுத்திப் பேசுவதை வைரமுத்து போன்றவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்’ என்றார். இன்னும் சில மணிநேரங்களில்  ஆண்டாள் கெட் அப்பில் சின்மயி காட்சியளிக்கும் சில மிடூ’ மீம்ஸ்களை காண நேரிடலாம். மனசு பத்திரம் மக்களே.

click me!