நடத்தையில் சந்தேகம்... பிரியாவின் கழுத்தை கரகரவென அறுத்த கணவன் சங்கர்.. திருப்பூரில் பரபரப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2021, 10:23 AM IST
Highlights

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் வீடு திரும்பிய கணவன் சங்கர் மனைவி பிரியாவிடம்  தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி பிரியாவின் நெற்றி, கழுத்து உடலில் பல பாகங்களிலும் கத்தியால் குத்தியதுடன், பிரியாவின் கழுத்தை அறுத்தார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சங்கர்36. இவர் தனது மனைவி பிரியா (32) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் ஒவ்வொரு சந்தைகளுக்கும் சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும்  நடத்தையில் சந்தேகம் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு வீட்டார் மற்றும் அருகில் உள்ளவர்கள் ஊர் பெரியவர்கள் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வந்ததாகவும் தெரிகிறது. 

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் வீடு திரும்பிய கணவன் சங்கர் மனைவி பிரியாவிடம்  தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி பிரியாவின் நெற்றி, கழுத்து உடலில் பல பாகங்களிலும் கத்தியால் குத்தியதுடன், பிரியாவின் கழுத்தை அறுத்தார். இதில் பிரியா மயக்கமடைந்து கீழே விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை பார்த்த சங்கர், போலீஸ் வழக்கு விசாரணைக்கு பயந்து அவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இது குறித்து அப்பகுதியினர் பல்லடம் போலீசாருக்கு கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் உடல் முழுக்க கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த  பிரியாமற்றும் அவரது கணவர் இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனவன் மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

click me!