’கை’விட்ட உச்சநீதிமன்ற நீதிபதி... ’கை’விலங்கோடு பசிதம்பரத்தை சுற்றும் சிபிஐ..!

By Thiraviaraj RMFirst Published Aug 21, 2019, 11:03 AM IST
Highlights

ப.சிதம்பரம் தொடுத்த மேள்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுத்து விட்டார்.

ப.சிதம்பரம் தொடுத்த மேள்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுத்து விட்டார். தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என ரமணா  விலகிக் கொண்டதால் ப.சிதம்பரம் எப்போது வேண்டுமானாலும்கைது செய்யப்படலாம் எனக் கருதப்படுகிறது. 

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க இன்று வலியுறுத்த சிதம்பரம் தரப்பில் திட்டமிட்டனர். அதன்படி அந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் வாதாடினார். நேற்று இரவு கூட சிபிஐ ப.சிதம்பரத்தை கைது செய்ய முயற்சித்தது என கபில் சிபில் கூறினார். ஆனால், ப.சிதம்பரம் மேமுறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுத்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.அவரை அனுகுங்கள்’’ என ரமணா விலகிக் கொண்டார்.

 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 24 மணி நேரத்தில் 3 முறை முகாமிட்டனர். மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, கடந்த 2007-ம் ஆண்டில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 305 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இதற்காக நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் ஐஎன்எக்ஸ் நிறுவனத்துக்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், அதற்கு ஈடாக லஞ்சம் தரப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தியது. பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இதையடுத்து முன் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரினார். இதனை தலைமை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் ப.சிதம்பரத்தை கைது செய்து விட்டு அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 
 

click me!