தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் ஆணையம்... தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க அதிரடி உத்தரவு!

Published : Sep 19, 2019, 08:09 AM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் ஆணையம்... தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க அதிரடி உத்தரவு!

சுருக்கம்

வரும் நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் அட்டவணையை தயார் செய்து நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது.   

உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அதிகாரிகளை நியமிக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என திமுக வழக்கு தொடர்ந்தது. இதனால், உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதன்பிறகு வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தல் நடத்துவதை மாநில தேர்தல் ஆணையம் ஒத்திவைத்து வந்தது. தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவின் பயமே உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவந்தன. 
தேர்தலை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் உத்தரவிட்டப்போதும் நடக்கவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. வரும் நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் அட்டவணையை தயார் செய்து நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது. 


இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அதிகாரிகளை நியமிக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசும் அரசிதழில் வெளியிட்டுள்ளது. எனவே விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!