ஸ்டாலின் குடும்பத்தினரே பா.ஜ.கவின் பி டீம் தான்..! அதிமுக வழக்கறிஞர் அணி பகீர் புகார்.

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2021, 10:13 AM IST
Highlights

அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல் சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மீது புகார் மனு அளித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் பிரதமர் மோடியையும் நினைத்து  தரம் தாழ்ந்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக வழக்கறிஞர் அணி புகார் கொடுத்துள்ளது. 

அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபு முருகவேல் சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மீது புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக வெற்றி பெற இருக்கும் சூழலில், நேற்று முன் தினம் தயாநிதிமாறன் பேசும் போது, மோடிக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள உறவு என்ன என்று கீழ்தனமாக பேசியுள்ளதாகவும், 

மறைந்த தலைவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல்,அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரே பா.ஜ.கவின் பி டீம் ஆக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், தயாநிதிமாறனின் அடுத்த பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்ககூடாது என கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் கூறினார். 

 

click me!