
இனம், மொழியைக் காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றது மாணவர்களால்தான் என தெரிவித்தார். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தையும் வெற்றிபெறவைத்தது திரளான மாணவர்கள் தான் எனவும் எனவே இனம், மொழியைக் காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாணவர்கள் நினைத்தால் அரசியல், பொருளாதார நிலையில் அனைத்தையும் சரிசெய்ய முடியும். எனவே அதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.