
சென்னை பெரவல்லூரில் விபத்தில் சிக்கி காயமடைந்தவரை, வாகனம் ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் மாண்புமிகு செயல் தலைவர் தளபதியார்
ஸ்டாலின் அவர்கள்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அவரது தொகுதியான கொளத்தூரில் ஆய்வு பணியை மேற்கொள்ள வந்திருந்தார். தன்னுடைய களப்பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய போது சாலையில் எதிர்பாரதவிதமாக விபத்தில் காயம் அடைந்து இருந்த ஒருவரை பார்த்து உடனடியாக ஸ்டாலின் அவருக்கு உதவ வண்டியை விட்டு கீழே இறங்கினார்
பின்னர் தனது உதவியாளர்களை கொண்டு, அவரை மீட்டு உடனடியாக ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஸ்டாலினை வாழ்த்தி மனம் நெகிழ்ந்தனர்.