கள்ளக் காதலனை வீட்டிற்கே வரவழைத்து உல்லாசம்.. நேரில் பார்த்த கணவன்.. பிறகு நடந்த பயங்கரம்.

By Ezhilarasan BabuFirst Published May 25, 2022, 5:05 PM IST
Highlights

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மும்பை புறநகர் பகுதியில் அரங்கேறி உள்ளது.

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மும்பை புறநகர் பகுதியில் அரங்கேறி உள்ளது.

திருமணத்துக்கு புறம்பான உறவுகள் பரவலாக அதிகரித்துள்ளது. கனவனை தாண்டி வெளி ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் அதே நேரத்தில் மனைவிகளுக்கு தெரியாமல் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையும் ஆங்காங்கே பரவலாக காணப்படுகிறது இதுபோன்ற சம்பவங்கள் கொலை தற்கொலை போன்ற குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இப்படிப்பட்டவர்களின் செயலால் ஒட்டு மொத்த குடும்ப கவுரவமும் காற்றில் பறக்க விடும் நிலைமைக்கு தள்ளப்படுகிறது. அவர்களின் குழந்தைகளும் சமூகத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலத்திற்கு ஆளாகின்றனர். இதேபோன்ற திருமணத்துக்கு புறம்பான சம்பவத்தில் மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து  கணவனை அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர்ப் பகுதியான கோவண்டி  பகுதியை  சேர்ந்தவர் ஜமீல் கான்  இவருக்கு அதே பகுதியை சேர்ந்த நசீரா கான் என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.  ஜமில் கானுக்கு நிரந்தர வேலை இல்லாததால் அவரது குடும்பம் பொருளாதாரரீதியாக நலிவடைந்தது. நசீராவுக்கு அவர் விரும்பியது போல ஆடம்பர வாழ்க்கை ஜமீலால் கொடுக்க முடியவில்லை, இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கணவனின் சம்பாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு குடும்ப நடத்துவது கடினம் என முடிவு செய்த நசீரா, அருகில் உள்ள கடை ஒன்றுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார், அங்குதான் அவரது வாழ்க்கையையோ தலைகீழாக  புரட்டி போடும் தொடர்பு ஏற்பட்டது. 

அங்கு ஆலம் (34) என்பவருடன் அசீனாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது, அவர்களுக்கு இடையே அது  நட்பாக மாறி, திருமணத்துக்கு புறம்பான உறவுக்கு வழிவகுத்தது இருவரும் கடந்த சில மாதங்களாக தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஜமீல் வீட்டில் இல்லாத நேரங்களில் ஆலம் எஸ்ராவின் இல்லத்திற்கே வந்து அவருடன்  உல்லாசம் அனுபவித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் தனது வீட்டில் நசீம் மற்றும் ஆலத்தை பார்த்த ஜமீன் அதிர்ச்சி அடைந்தார். அப்போது ஆத்திரத்தில் தனது மனைவியை அடிக்கப் பாய்ந்தார் ஜமீல், இந்நிலையில்தான் நசீரா கானும், ஆலமும் சேர்ந்து ஜமீனை அடித்துக் கொலை செய்தனர். இந்நிலையில்தான் போலீசார் கள்ளக்காதலன் ஆலம் மற்றும் மனைவி நசீரா கானை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 

click me!