ஆவணப்படம்கூட எடுக்க லாயக்கில்லாதவர் என விடுதலை புலிகளால் திருப்பி அனுப்பப்பட்டவர் சீமான்... வன்னி அரசு அதிரடி!

Published : Dec 21, 2021, 06:17 PM IST
ஆவணப்படம்கூட எடுக்க லாயக்கில்லாதவர் என விடுதலை புலிகளால் திருப்பி அனுப்பப்பட்டவர் சீமான்... வன்னி அரசு அதிரடி!

சுருக்கம்

ஆவணப்படம் எடுக்க கூட லாயக்கில்லாதவன் என்பதால் அவரை அனுப்பி வைத்து விடுகிறார்கள். அதற்கான வாய்ப்பு அடுத்து இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஆவணப்படம்கூட எடுக்க லாயக்கில்லாதவர் என விடுதலை புலிகளால் திருப்பி அனுப்பப்பட்டவர் சீமான் என விடுதலை சிறுத்தகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர், ‘’விடுதலைப்புலிகள் அவர்களது அமைப்பு சார்ந்த அனைத்து சம்பவங்களையும் காட்சி படுத்துவார்கள் அல்லது ஆவணப்படுத்துவார்கள். அதனை காட்சிப்படுத்த ஆவணப்படுத்த ஒரு இயக்குனர் வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது விடுதலைப் புலிகள் யார் மீதெல்லாம் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அந்த இயக்குனர்களை அழைத்து ஆவணப்படத்தை இயக்கி தருமாறு கேட்பது வழக்கம்.

 நான் அங்கிருக்கும் போது சில பேர்களை இயக்குமாறு கேட்க முயன்றேன். அங்கிருந்த சேரலாதன் எனது சிறைவாசி. நாங்கள் மதுரையில் சிறை சாலையில் இருந்தோம். சேரலாதன் தான் விடுதலைப் புலிகளின் கலை இலக்கிய பிரிவு பொறுப்பாளர். நிதர்சனம் என்று ஒரு பிரிவில் ஊடகப் பொறுப்பாளர் இருந்தார். சிறையில் இருக்கும் போது நானும் அவரும் நல்ல நண்பர்கள்.

பிறகு நான் இலங்கை செல்லும் போது இதற்கு பொறுப்பாளரான பிரிகேடியர் சுபதமிழ்ச்செல்வன் தான். அவரிடம் சென்று பேசும்போது நான் சில விஷயங்களைச் சொன்னேன். அப்போது சீமானைப் பற்றி நான் தான் அவரிடம் எடுத்துக் கூறினேன். தம்பி என்ற ஒரு படம் எடுத்திருக்கிறார். நல்ல இயக்குநர் எனக்கூறினேன். அதற்கு அவர்கள், சீமான் தங்களுக்கு உதவுவாரா? என்று எனக் கேட்டார்கள். நான் ’தெரியவில்லை. ஆனால் பேசிப் பாருங்கள்’ என்றேன்.

 அடுத்து சீமானிடம் அவர்கள் பேசினார்கள். பேசியதற்கு பிறகு அவரை அனுப்பி விடுகிறார்கள். அதாவது ஆவணப்படம் எடுக்க கூட லாயக்கில்லாதவன் என்பதால் அவரை அனுப்பி வைத்து விடுகிறார்கள். அதற்கான வாய்ப்பு அடுத்து இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஜான் ஆணிவேர் என்கிற படத்தை எடுத்தார்.

 

சீமானை வைத்து ஆவணப்படம் கூட எடுக்க விடுதலைப் புலிகளுக்கு நம்பிக்கை வரவில்லை. அடுத்து நான் பிரிகேடியர் தமிழ்ச் செல்வனை அணுகி சீமானுக்கு அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டியதுதானே என கேட்டேன். அதற்கு அவர் இல்ல தம்பி, அவர் அதற்கு எந்த விதத்திலும் லாயக்கு இல்லை. இதுகுறித்து சேரலாதனிடம் விரிவாக பேசி இருக்கிறேன். நீங்கள் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சுப தமிழ்ச்செல்வன் தெரிவித்துவிட்டார். ஆனால், சீமான் இலங்கை சென்றதெல்லாம் உண்மைதான். ஆனால், அவருக்கு பெரும் மரியாதை எல்லாம் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார் வன்னி அரசு.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் விழாவில் அரசியல் பேசாதீங்க.. மேடையில் அவமானப்பட்ட தவெக தலைவர்.. என்ன நடந்தது?
தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்