ஜில்...ஜங்...ஜக்காகி போன சசிகலா தொண்டர்கள் - சசிகலா விடுதலை என கொண்டாட்டம்!!!

 
Published : Feb 14, 2017, 09:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஜில்...ஜங்...ஜக்காகி போன சசிகலா தொண்டர்கள் - சசிகலா விடுதலை என கொண்டாட்டம்!!!

சுருக்கம்

சொத்துகுவிப்பு வழக்கில் காலை பத்து மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த இந்தியாவே என்ன நடக்கும்  என எதிர்பார்த்து காத்திருந்தது.

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகள் தங்கிருக்கும் வீடு போயஸ் கார்டனில் உள்ளதால் ஏராளமான சசிகலா ஆதரவு தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

சரியாக 10.30 மணியளவில் அனைவரும் பதற்றத்தோடு காத்திருந்த நிலையில், யாரோ ஒரு அவசர கோளாறு தொண்டர் சசிகலா விடுதலை என கொளுத்தி போட்டு விட்டார்.

இதை கேட்டவுடன் சொல்லத்தான் வேண்டுமா? ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கலைகட்டியது போயஸ் கார்டன்.

பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தலைகால் புரியாமல் குதிக்க தொடங்கி விட்டனர். இதைபார்த்த போயஸ்கார்டன் வாசிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

எதிர்கட்சியினர் இங்கு வந்து கிண்டல் செய்கிறார்களா என நினைக்கும் அளவிற்கு வித்தியாசமான காட்சிகள் அங்கு அரங்கேறின.

பின்னர், அங்கு இருந்த குடியிருப்புவாசி ஒருவர் டிவியை ஒழுங்காக பார்த்துவிட்டு வெளியே வந்து அவர்களிடம் எடுத்து கூறினார்.  

அப்போதுதான் தலைகால் புரியாமல் ஆடிகொண்டிருந்த தொண்டர்கள் சற்று நிதானமாகி தனது நண்பர்களிடம் தொலைபேசியில் விசாரிக்க தொடங்கினர்.

பின்னர் உண்மை தெரிந்தபின் ஒருவர் பின் ஒருவராக வந்த வழி தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு