“சசிகலா புஷ்பாவின் படங்களை தவறாக வெளியிடுவோர் மீது நடவடிக்கை” - டெல்லி உயர்நீதிமன்றம்

Asianet News Tamil  
Published : Oct 05, 2016, 05:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
“சசிகலா புஷ்பாவின் படங்களை தவறாக வெளியிடுவோர் மீது நடவடிக்கை” - டெல்லி உயர்நீதிமன்றம்

சுருக்கம்

அதிமுக தலைமைக்கு எதிராக பேசியதால் கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டார்  மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.

அதைதொடர்ந்து சசிகலாவின் வீட்டில்  வேலை பார்த்த பானுமதி, ஜான்சி ஆகியோர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர்மீது பாலியல் புகார் அளித்தனர்.  

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சசிகலா புஷ்பாவும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதனையடுத்து தன்னை தவறாக சித்தரிக்கும் படங்களை நீக்க வேண்டும் என சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் மூலம் சசிகலா புஷ்பா பற்றி தவறாக படம் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

TN Politics: முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்; ஜோதிடர் ராதன் பண்டிட்டை சுற்றி வெடித்த சர்ச்சை! உண்மை என்ன?
TVK vs ADMK: விஜய் வெளிச்சத்தில் காணாமல் போகிறதா அதிமுக?! பாஜக செய்யும் வேலையை செய்கிறதா தவெக.! என்ன செய்ய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி