போயஸ் கார்டனில் எம்ஜிஆர் படத்துக்கு சசிகலா அஞ்சலி..!!!

 
Published : Dec 24, 2016, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
போயஸ் கார்டனில் எம்ஜிஆர் படத்துக்கு சசிகலா அஞ்சலி..!!!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அதிமுகவினரும், இன்று காலை முதல் மெரினா கடற்கரைக்கு சென்று, அங்குள்ள எம்ஜிஆர் நினைவிடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில், அவரது தோழி சசிகலா, எம்ஜிஆர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு