நாக்கைப்புடுங்கற மாதிரி விஜயை கேள்வி கேட்ட டிடிவி... இதுக்கு பதில் கிடைக்குமா?

By vinoth kumarFirst Published Nov 9, 2018, 11:28 AM IST
Highlights

சர்கார் படத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கியதை விமர்சிப்பவர்கள் சினிமாவுக்கு மட்டும் ஏன் வரிவிலக்கு கேட்கிறார்கள் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்கார் படத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கியதை விமர்சிப்பவர்கள் சினிமாவுக்கு மட்டும் ஏன் வரிவிலக்கு கேட்கிறார்கள் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சர்கார் படத்தின் மூலமாக தனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை நடிகர் விஜய் வெளிக்காட்டி இருக்கிறார் என அவர் விமர்சனம் செய்துள்ளார். 

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு அடியெடுத்து வைக்கும் வகையில் சர்கார் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திரையரங்களில் சர்ச்சையான காட்சிகள் நீக்கும் வரை சர்கார் திரையில் வெளியிடக் கூடாது என்று கூறியுள்ளனர்.  

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சர்கார் சர்ச்சை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: சர்கார் படத்தில் விலையில்லா பொருட்கள் வழங்கியதை விமர்சிப்பவர்கள் சினிமாவுக்கு மட்டும் ஏன் வரிவிலக்கு கேட்கிறார்கள் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர்கள் உள்பட எல்லோரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது தவறு கிடையாது. மேலும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடு கிடையாது. விலையில்லா பொருட்கள் தவறு என்று நினைத்தால் எல்லா நடவடிக்கைகளையும் சினிமாவில் காட்டியிருக்க வேண்டும் என்று தினகரன் கூறினார். 

இலவச லேப்டாப், இலவச சைக்கிள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை என அனைத்தையும் அவர்கள் இவ்வாறுதான் கருதுவார்களா? இந்தியா ஒன்றும் முன்னேறிய நாடு அல்ல. வளர்ந்து வரும் நாடுதான். எனவே இது மக்களுக்கு அவசியமான ஒன்றுதான். ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில்சர்கார் படத்தை வெளியிட்டிருந்தால் படக்குழுவினரை பெரிய வீரர்கள் என கருதலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

மேலும் மக்கரு குக்கருமா போய் தரைல உக்காருமா? என்ற சர்கார் பாடல் வரிகள் டிடிவி தினகரனை கிண்டல் செய்வது போல வரிகள் இடம் பெற்றுள்ளதாலும் கடும் கோபம் அடைந்ததையடுத்து விஜயை அவர் வறுத்தெடுத்துள்ளார். 

click me!