இடைத் தேர்தல்களில் பாஜக தோற்றுப் போனதுக்கு உத்தரபிரதேச அமைச்சர் சொன்ன காரணம் என்ன தெரியுமா ?  கேட்டா விழுந்து விழுந்து சிரிப்பீங்க!!

Asianet News Tamil  
Published : Jun 02, 2018, 10:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
இடைத் தேர்தல்களில் பாஜக தோற்றுப் போனதுக்கு உத்தரபிரதேச அமைச்சர் சொன்ன காரணம் என்ன தெரியுமா ?  கேட்டா விழுந்து விழுந்து சிரிப்பீங்க!!

சுருக்கம்

reason for bjp fail in by election told minister

உத்தரபிரதேச மாநிலம் கைரானா மற்றும் நூர்புர் தொகுதி இடத் தேர்தல்களில்  பாஜக தோற்றதற்கு தொண்டர்கள் சம்மர் லீவுக்கு குடும்பத்தோட ஊருக்கு போனதுதான் காரணம் என அம்மாநில  அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்திரி சிரிக்காமல் விளக்கம் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கைரானா மக்களவை தொகுதி மற்றும் நூர்புர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. கைரானாவில் ராஷ்ட்ரிய லோக் தளமும், நூர்புரில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றன.

உண்மையிலேயே எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டதே பாஜகவின் தோல்விக்கு காரணம் என அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அம்மாநில பாஜக அமைச்சர்  லக்‌ஷ்மி நாராயன் சவுத்திரி வித்தியாசமான காரணத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடையே அவர் பேசும்போது,  கோடை விடுமுறை என்பதால் பாஜக  தொண்டர்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியூருக்கு டூர் சென்றுவிட்டனர். அதனால்தான்  இடைத்தேர்தலில் பாஜக தோற்றுவிட்டது என கூறி செய்தியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!