ஓ.பி.எஸ்க்கு வாகனம் தயார்.... கலக்கத்தில் எதிர் அணியினர்...

 
Published : Feb 22, 2017, 03:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
ஓ.பி.எஸ்க்கு வாகனம் தயார்.... கலக்கத்தில் எதிர் அணியினர்...

சுருக்கம்

சசிகலா அணிக்கு எதிராக தங்களது எழுச்சியை காண்பிக்கும் விதத்தில் தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ்சும் தீபாவும், சுற்றுபயணம் கிளம்புகின்றனர். அதற்கான வாகனம் தயார்நிலையில் உள்ளது.

அதற்கு முன்பு ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் போட்டியிட்ட ஆர்.கே.நகரில் பிரமாண்ட விழாவை நடத்தி பிரச்சாரத்தை துவங்க உள்ளனர்.

1988 ல் ஜானகி ஜெயலலிதா என அணிகளாக பிரிந்த அதிமுக ஜெயலலிதா வசம் நிரந்தரமாக தங்கியது.

அதன்பின்னர் 28 ஆண்டுகள் பல சொதனைக்களை கடந்து சாதனைகள் படைத்து வெற்றிப்பாதையில் கட்சியை நடத்தி சென்ற ஜெயலலிதா மறைந்த பிறகு, மீண்டும் ஓ.பி.எஸ் , சசிகலா என இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது.

ஆட்சி சசிகலா தரப்பின் பக்கம் இருந்தாலும் மக்கள் ஆதரவு ஓ.பி.எஸ், ஜெ.தீபா பக்கம் உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. கடுமையான தொண்டர்களின் எதிர்ப்புக்கும் பொதுமக்களின் அதிருப்திக்கும் இடையே முதல்வராக பதவியேற்ற பெருமை எடப்பாடி பழனிசாமியையே சேரும்.

பதவியேற்ற அன்றே மக்களை கவரும் விதத்தில் 5 அறிவிப்புகளை எடப்பாடி வெளியிட்டாலும் அது பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்க வில்லை. 

மறுபுறம் ஓ.பி.எஸ், தீபா இருவருக்கும் மக்கள் ஆதரவு இருப்பதை, அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு செல்லும்போது மக்கள் அளிக்கும் வரவேற்பை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அறிவித்ததுபோல் மக்களை தேடி பிரச்சார பயணம் மேற்கொள்வதில் இறங்கிவிட்டார்.

வரும் பிப். 24 ஜெயலலிதா பிறந்தநாள் வருவதையடுத்து அவரும் தீபாவும் பிரச்சார தருணத்தை துவக்க உள்ளனர். தமிழகத்தை 5 மண்டலமாக பிரித்து முதல் கட்டமாக 122 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர். 

இதற்கு முன்னோட்டமாக பிப்.24 அன்று ஜெயலலிதா தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் ஜெ.தீபா பங்கேற்கும் மாபெரும் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது.

இதில் இருவரும் கலந்து கொண்டு மக்கள் நலத்திட்டங்களை வழங்குகின்றனர். பின்னர், பிரச்சார பயணத்தை துவக்க உள்ளனர். இதற்கான வாகனங்கள் தயார்நிலையில் உள்ளது. அதனை கழக உடன் பிறப்புகளுடன் ஓ.பி.எஸ் இன்று பார்வையிட்டார்.

மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், தொகுதிகளின் பட்டியல், ஆகியன தயாராகி வருகிறது.

சிங்கம் ஒன்று புறப்பட்டதே..... அப்டின்னு பாட்டு பாட தோணும். ஆனால் பாட முடியாது, பாடவும் கூடாது. காரணம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தன்னை சிங்கம் சிங்கம் என்று கூவியபோது, ஓ.பி.எஸ் மனிதனை பார்த்து யாரவது சிங்கம் என்று கூவுவார்களா? என வடிவேலு காமெடியை சொல்லி கிண்டல் அடித்தார். அதனால் கொஞ்சம் அடக்கி வாசிப்போம்....

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு