3 ராஜ்யசபா சீட்டுகளில் ஏற்கெனவே ஒரு சீட்டுக்கு துண்டைப்போட்டு வைத்து விட்டார் வைகோ. இந்த நிலையில் மீதமுள்ள இரண்டு சீட் போட்டாபோட்டி நடந்து வருகிறது.
தமிழக அரசியலின் அடுத்த கட்ட பரபரப்பு ராஜ்ய சபா சீட். அதிமுக, திமுக கட்சிகளில் யாருக்கு தரப்போகிறார்கள் என்பதில் மல்லுக்கட்டு ஆரம்பித்து இருக்கிறது. இரு கட்சிகளுமே இன்னும் யாருக்கு சீட் என்பதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்காத நிலையில் இரு கட்சி நிர்வாகிகளுமே வலுவாக முட்டி மோதி வருகிறாகள். இந்நிலையில் அந்த பரபரப்பு திமுகவில் தொற்றிக் கொண்டுள்ளது.
இதனை அறிந்த சுபவீ, திமுகவில் பல்லாயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக உழைத்து வருகின்றனர். அவர்கள் இருக்கும்போது ராஜ்யசபா சீட்டை எனக்கு வழங்குவது சிறப்பாக இருக்காது. அதனை நான் விரும்பவும் இல்லை’’ என சு.ப.வீரபாண்டியன் அறிக்கை விடுத்துள்ளார்.