மோடி வெறுப்பை காட்டினார்... நாங்க அன்பை காட்டினோம்...ராகுலின் தேர்தல் பஞ்ச்!

By Asianet TamilFirst Published May 12, 2019, 3:00 PM IST
Highlights

இந்தத் தேர்தலில் உண்மையான விவகாரங்களைப் பற்றி பேசுவதை பிரதமர் மோடி தவித்தார். தேவையில்லாத கதைகளைக் கூறி வருவதால் மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளார்கள்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்துக்கு 6-வது கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது. டெல்லி, உ.பி., ம.பி. உள்பட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் வாக்குரிமை உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவுரங்கசீப் லேன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.


வாக்களித்துவிட்டு வெளியே வந்த ராகுல்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்னை, ஜி.எஸ்.டி., ரஃபேல் ஊழல் என இந்தத் தேர்தலில் பேசுவதற்கு பல முக்கியமான விவகாரங்கள் இருந்தன. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வெறுப்புணர்வை மட்டுமே வெளிப்படுத்தினார். பதிலுக்கு நாங்கள் அன்பை மட்டுமே பயன்படுத்தினோம்.  இந்தத் தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார். 
இதேபோல டெல்லி லோடி எஸ்டேட் பகுதியில் உள்ள சர்தார் பட்டேல் வித்யாலயாவில் தனது கணாவர் ராபர்ட் வத்ராவுடன் வந்து வாக்களித்தார் பிரியங்கா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசி பிரியங்கா, “இந்தத் தேர்தலில் உண்மையான விவகாரங்களைப் பற்றி பேசுவதை பிரதமர் மோடி தவித்தார். தேவையில்லாத கதைகளைக் கூறி வருவதால் மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளார்கள். அது தேர்தலில் எதிரொலிக்கும். மோடி ஆட்சி வீழ்வது உறுதி” என்று தெரிவித்தார். 

click me!