அரசியலில் புதிய அத்தியாயம்! அதிரடியாய் காய் நகர்த்தும் ரஜினி!

By manimegalai aFirst Published Sep 5, 2018, 5:13 PM IST
Highlights

தமிழக அரசியலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பல எதிர்ப்பாராத மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என பல வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் ரஜினியை பற்றி இருந்த கேள்விக்கும் பதில் கிடைத்தது. அதிரடியாக தன்னுடைய ஆன்மீக அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார் ரஜினிகாந்த். 

தமிழக அரசியலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பல எதிர்ப்பாராத மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என பல வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் ரஜினியை பற்றி இருந்த கேள்விக்கும் பதில் கிடைத்தது. அதிரடியாக தன்னுடைய ஆன்மீக அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார் ரஜினிகாந்த். அதே போல் அரசியலே வேண்டாம் என கூறி வந்த கமலும் தன்னுடைய அரசியல் வருகை குறித்து அறிவித்தார். 

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இனி போஸ்டர், பேனர், பதாகை வைக்க ரஜினிகாந்த் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார். தலைமை மன்றத்துக்கு அனுப்பி அனுமதி எண் பெற்ற பிறகே போஸ்டர், பேனர்களை வைக்க வேண்டும் என கூறி, புதிய சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளார். 

மேலும் போஸ்டர்கள் எந்த அளவில் இருக்க வேண்டும், யார் யார் புகைப்படம் பெரிதாக இருக்க வேண்டும், சிறியதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் ரஜினி அறிவித்துள்ளது. அரசியலில் புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது. 

இதுகுறித்து வெளியாகியுள்ள புகைப்படங்கள்:


 

click me!