திமுகவின் முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கே.என்.நேரு பணப்பட்டுவாடா குறித்து தனது கட்சிக்காரர்களுடன் கெட்ட வார்த்தையில் பேச, அந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர், கே.என்.நேரு பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக சாடியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6(இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளது) நடக்கவுள்ளது. அதிமுக - திமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக தமிழகத்தில் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோதிலும், அதிமுகவிற்கு எதிரான அலை தமிழகத்தில் இல்லை.
இது திமுகவிற்கு பெரும் அதிருப்தியையும் கவலையையும் அளித்ததையடுத்து, எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் திமுக, அதிமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் மட்டுமல்லாது தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்டு, அதன்மூலம் தங்களது கோர முகத்தை தாங்களே மக்களுக்கு காட்டினர்.
குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் விதமான தரம்தாழ்ந்த ஆபாச பேச்சுகளை திமுக தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். முதல்வர் பழனிசாமியின் பிறப்பு குறித்து ஆ.ராசா பேசிய கீழ்த்தரமான பேச்சு, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பெண்கள் குறித்த இழிவான பேச்சு என திமுகவினரின் தரம்தாழ்ந்த பிரச்சாரங்களும் பேச்சுகளும் மக்களை முகம் சுழிக்க வைத்தது.
இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரான கே.என்.நேருவின் பணப்பட்டுவாடா குறித்த விவாதத்தில் பெண்கள் குறித்த இழிவான பேச்சு பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக திமுக குற்றம்சாட்டி வந்த நிலையில், திமுகவின் மூத்த தலைவரான கேஎன்.நேருவே, திமுக சார்பில் ஓட்டுக்கு காசு கொடுத்ததை உறுதிப்படுத்தி, தங்கள் கட்சியின் முகத்திரையை அவராகவே கழட்டியுள்ளார். அந்த உரையாடலில் பெண்கள் குறித்தும் தரம்தாழ்ந்து பேசியுள்ளார்.
கே.என்.நேரு, முசிறி தொகுதி திமுக வேட்பாளரான தியாகராஜன் மற்றும் திமுகவினர் சிலர் ஒரு அறையில் அமர்ந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது குறித்து பேசுகின்றனர். அப்போது, 200 ரூபாய் கொடுத்துட்டியா என்று கே.என்.நேரு கேட்க, அதற்கு தியாகராஜன் கொடுத்தாச்சு என்கிறார். ஆனால், அவர்கள் 500 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்; அதனால் நாமும் 500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நமது ஆட்களே கூறுகிறார்கள் என்று ஒருவர் கூற, அதனால் கடுப்படைந்த கேஎன்.நேரு, அவர்கள் -------யை ந---கிறார்கள் என்றால், நாமும் --க முடியுமா என்று அருவெறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் கேஎன்.நேரு.
Video of KNNehru, DMK ldr n candidate Trichy West with Thyagarajan cand from Musiri.
Listen to these goons of insult women n openly discuss cash distribution.
They want voters mandate ? 🤬🤮 pic.twitter.com/iTJfnLqcnn
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா குறித்து வெளிப்படையாக பேசியதுடன், பெண்கள் குறித்தும் இழிவாக கே.என்.நேரு பேசியதை கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர், அந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து பெண்கள் குறித்து இழிவாக பேசிய கே.என்.நேரு மற்றும் திமுகவின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.