அடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் அடித்து ஊத்தப் போகிறது மழை..!! கடல் கொந்தளிக்கும் என எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2020, 1:27 PM IST
Highlights

ஆகஸ்ட் 20  முதல் தென் மேற்கு  மற்றும் அரபிக்கடலை ஒட்டியுள்ள ஆந்திரா,ஓடிசா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் என்றும்,குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.என்றும் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பந்தலூர் தாலுகா ஆபீஸ் (நீலகிரி) 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 20  முதல் தென் மேற்கு  மற்றும் அரபிக்கடலை ஒட்டியுள்ள ஆந்திரா,  ஓடிசா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 21-முதல் ஆகஸ்ட் 24-வரை,தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், இதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல் தென் தமிழக கடலோர பகுதிகளில், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 20.08.2020  இரவு 1:30  மணி வரை  கடல் உயர் அலை 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

 

click me!