நாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் காகித விமானங்களை கையில் வைத்துக் கொண்டு, பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் காகித விமானங்களை கையில் வைத்துக் கொண்டு, பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த விவகாரத்தால் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க் கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை, மாநிலங்களவையில் இதே விவகாரம் நேற்றும் எதிரொலித்தது. இதனால் மாநிலங்களவை நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை யில் கடும் அமளி ஏற்பட்டது.ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை கேலி செய்யும் வகையிலும், சிஏஜி அறிக்கையை ஏற்க மறுத்தும் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடைபெறுகிறது.