ரூ.10000 வாங்க ஆர்,கே,நகர் தொகுதி மக்கள் ரெடி ! சைலண்ட்டா டிஸ்ட்ரிபியூசன் நடக்குதா ?

First Published Jan 3, 2018, 7:41 AM IST
Highlights
rk Nagar people! Will ready to get ten thousand Silenta Distributions Be Done


சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில்  குக்கர் சின்னத்தை வெற்றி பெற வைத்த அத்தொகுதி மக்களுக்கு டி.டி.வி. தினகரன் சார்பில்  தலா 10,000 ரூபாய் வழங்கி  நன்றி தெரிவிக்கும் ரகசிய வேலை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன்  அமோக அதிசய வெற்றி பெற்றார். ஆளும் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், கடந்த டிசம்பர் 29ஆம் தேதி எம்எல்ஏ பதவியை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், குக்கரில் வாக்கு குத்தி தன்னை எம்எல்ஏ ஆக்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி  தினகரன் தரப்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு  தலா 10000 ரூபாய் 10000 ஆயிரம் ரூபாய்  பணப்பட்டுவாடா செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் தேதி தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு , கடைசி நேரத்தில் வாக்களார்களுக்கு 20 ரூபாய் நோட்டுகளை டோக்கன்களாக கொடுத்து டிடிவி தினகரன் தரப்பினர் தங்களுக்கான ஓட்டுக்களை உறுதி செய்தனர்.

தேர்தலில்  வெற்றி பெற்றதும் பெரிய தொகையைக் கொடுத்து கவனிப்பதாக  அந்த கும்பல் உறுதி கூறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து , 20 ரூபாய் டோக்கன் இருக்கும் அனைவருக்கும்  மிக ரகசியமாக தலா 10000 ரூபாய் வழங்கப்போவதாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதி மக்களும் தங்களுக்கு கிடைக்கப்போகும் பணத்தை எண்ணி மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்றே கூறப்படுகிறது.

 

 

click me!