கமலஹாசனுக்கு மக்கள் எழுப்பிய கேள்விகளும்  அவரின் பதில்களும்

First Published Mar 8, 2018, 7:53 PM IST
Highlights
Questions raised by Kamal Hassan and his answers


சென்னை ராயப்பேட்டை மகளிர் தின நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது மக்களிடம் இருந்து சில கேள்விகள் கமலஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தார். 

அவை வருமாறு:

கேள்வி: நான் நாட்டிற்கா வேலை செய்வதா அல்லது வீட்டிற்காக வேலை செய்வதா? 

பதில்: நாடு என்பது வீட்டில் இருந்து ஆரம்பமாகிறது. கோவிலுக்கு போகும் கண்ணியம் தேர்தல்  வாக்குப்பதிவிலும் இருக்க வேண்டும். கோவில்களை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்கலாம். அனைத்து இடங்களுக்கு சென்று புரிந்து கொண்டவன் நான். 

கேள்வி: உங்களை ஏன் ஆதரிக்க வேண்டும்? மற்றவர்களை போல் நீங்களும் நசுக்க மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? 

பதில்: இந்த சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். உங்களை விலைக்கு வாங்க மாட்டேன். அவ்வாறு நீங்கள் கண்காணித்து கொண்டே இருந்தால் நான் மட்டும் அல்ல. யாருமே தவறமாட்டார்கள். 

கேள்வி: ஊழல் கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைக்கமாட்டேன் என உறுதியாக அறிவிப்பீர்களா?

பதில்: அறிவிச்சுட்டா போச்சு. நான் நினைத்திருந்தால் ஏதாவது கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கலாம். ஆனால் கயவர்களுடன், திருடர்களுடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என சத்தியம் செய்து கூறுகிறேன். இது ஆட்சிக்காக கொடுக்கும் வாக்குறுதி அல்ல. கட்சி ஆரம்பிக்கும்போது கொடுக்கும் வாக்குறுதி. 

கேள்வி : உங்களுக்கு பிடித்த பெண் தலைவர் ஒருவரை பற்றி கூறுங்களேன்? 

பதில்: என் தாய். அவர்தான் என் தலைவி. அவருக்கு அரசியல் தெரியாது. அன்பு மட்டுமே தெரியும். எங்களை கவனித்தவள் அவரை கவனித்துக்கொள்ள தவறிவிட்டாள். 

click me!