திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சிக்கல்... உச்சநீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published Sep 30, 2019, 3:03 PM IST
Highlights

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது மதுரை அய்யம்பாளையத்தில் கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ஐ. பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது. 

கல்குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது மதுரை அய்யம்பாளையத்தில் கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ஐ. பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 
கல்குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக பதில் தருமாறு ஐ.பெரியசாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

click me!