தமிழக மக்களே மிகுந்த எச்சரிக்கையா இருங்க..!! அடுத்த 3 நாளைக்கு வச்சு செய்யப் போகுது..!!

Published : Nov 03, 2020, 01:55 PM IST
தமிழக மக்களே மிகுந்த எச்சரிக்கையா இருங்க..!! அடுத்த 3 நாளைக்கு வச்சு செய்யப் போகுது..!!

சுருக்கம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  

தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தேனி,  நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் (4-11-2020) பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மதுரை, சிவகங்கை, கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 72 மணி நேரத்தில் (5-11-2020) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை  25 டிகிரி செல்சியஸையும்  ஒட்டி பதிவாகும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாக கூடும். கடந்த 24 மணி நேரத்தில்  மஞ்சளாறு (தேனி) 9 சென்டிமீட்டர் மழையும், பர்லியார் (நீலகிரி) 8 சென்டி மீட்டர் மழையும், மேட்டுப்பாளையம் (கோவை) கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) தலா  7சென்டி மீட்டர் மழையும், உடுமலைப்பேட்டை (திருப்பூர்) குன்னூர் (நீலகிரி) தல 6 சென்டிமீட்டர் மழையும், பெரியனைக்கென்பளையம் (கோவை) உத்தம்பாளையம் (தேனி) தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!