அரசே விழித்தெழு, அல்லேல் விலகிவிடு... கமல்ஹாசன் எச்சரிக்கை..!

Published : Aug 24, 2020, 04:42 PM IST
அரசே விழித்தெழு, அல்லேல் விலகிவிடு... கமல்ஹாசன் எச்சரிக்கை..!

சுருக்கம்

சாமானியர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.  

சாமானியர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர்பக்கத்தில், ‘’சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு, தொழில் பாதிப்பு,குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. அரசே விழித்தெழு, அல்லேல் விலகிவிடு’’ எனத் தெரிவித்துஇருந்தார். 

 

அதனை டேக் செய்துள்ள மகேந்திரன், ‘’உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு, திசைத் திருப்பப்படுகின்றன. எல்லாம் நன்றாக இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்! சாமானியர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!