2 கல்யாணம் பண்ணியும் அடங்கல.. வேலை செய்யும் இடத்திலும் கள்ளக்காதல்.. 2வது கணவனை போட்டுத் தள்ளிய மனைவி.

By Ezhilarasan BabuFirst Published May 16, 2022, 5:07 PM IST
Highlights

ஒரு பெண் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து இரண்டாவது கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்காக அவர்கள் தொழில் முறை துப்பாக்கிச் சூடும் நபரை பயன்படுத்தி கொலையை அரங்கேற்றி உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு பெண் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து இரண்டாவது கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்காக அவர்கள் தொழில் முறை துப்பாக்கிச் சூடும் நபரை பயன்படுத்தி கொலையை அரங்கேற்றி உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பகீர் சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 

பெரும்பாலான கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் கள்ளக்காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இரண்டாவது கணவனின் சொத்தை அபகரிக்க முயன்ற மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ரிஷி பால் ஷர்மா என்பவரை பூஜாஸ்ரீ என்ற பெண் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நொய்டாவில் ஒன்றாக வசித்து வருகின்றனர் பூஜா சிங் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு அகில் என்ற நபருடன் தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.  

பூஜா சிங்கிற்கு முதல் கணவருடன் பிறந்த மகன் விஷால் சிங், விஷால் சிங் தாய் பூஜா சிங்குடன் வசித்து வருகிறார். முதல் கணவரை விவாகரத்து செய்த பின்னரே  ரிஷி பால் சர்மாவுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் பூஜா சிங்,  மனைவி பூஜா சிங்கின் நடத்தையில் ரிஷி பால் சிங்குக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது, இதனால் ஆத்திரமடைந்த பூஜா சிங் தனது இரண்டாவது கணவன் ரிஷி பாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதுகுறித்து கள்ளக்காதலனிடத்தில் கூறினார். எனவே ரிஷி பாலை தீர்த்துக்கட்ட தொழில்முறை துப்பாக்கிச்சூடு பயிற்சி பெற்ற கூலிப்படையை கள்ளக் காதலன் அகில் ஏற்படுத்தினார். இந்நிலையில் ரிஷி பால் சர்மா கடந்த மே 10ஆம் தேதி அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது  செக்டர் 126 வைத்து ரிஷி பால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அப்பகுதியில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரது மனைவி பூஜா சிங்கை விசாரித்தனர். அப்போது மகன் மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரண்டாவது கணவனை கொலை செய்ததையும், சொத்தை அபகரிக்க கொலை செய்ததையும் பூஜா சிங் ஒப்புக் கொண்டார். இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த மே 14-ஆம் தேதி கல்காஜியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. சொர்ணாலி கோஸ் என்ற பெண் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கும் அவரது கணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்த ஸ்வர்ணாலி கோஸ் தனது கள்ளக்காதலன் மோகன் பாலுடன் சேர்ந்து கணவனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

சொர்ணாலி கோஸ் தனது கணவனின் கைகளை பிடித்துக் கொண்ட நிலையில், கள்ளக் காதலன் கத்தியால் குத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது கொலைக்குப் பின்னர் கள்ளக்காதலன் மோகன் பால் மேற்கு வங்கத்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். 
 

click me!