தவறு செய்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது... திமுகவினரை திடுக்கிட வைத்த அமைச்சர்..!

By Thiraviaraj RMFirst Published May 11, 2021, 12:04 PM IST
Highlights

ஈஷா யோகா மையம் மீதான நில அபகரிப்பு புகாரை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 

ஈஷா யோகா மையம் மீதான நில அபகரிப்பு புகாரை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளை காண வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபுவிடம் ஈஷா யோகா மைய முறைகேடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், முறைகேடுகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ளது போல் இலவசமாக உணவு வழங்கும் திட்டம், மற்ற அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதிமுகவினர் மட்டுமல்ல. திமுகவினர் யாரும் த்வறு செய்தாலும் தப்பிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

click me!