நித்யானந்தா எனக்கு கொடுத்தனுப்பிய ரூ.20 கோடி... நெல்லை கண்ணன் பரபரப்பு வாக்குமூலம்..!

Published : Dec 31, 2019, 06:00 PM IST
நித்யானந்தா எனக்கு கொடுத்தனுப்பிய ரூ.20 கோடி... நெல்லை கண்ணன் பரபரப்பு வாக்குமூலம்..!

சுருக்கம்

நித்யானந்தா தனக்கு 20 கோடி ரூபாய் கொடுத்து அனுப்பியதாக நெல்லை கண்ணன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு மோடியையும், அமித் ஷாவையும் அவதூறாக பேசிய அதே வீடியோவில் நெல்லை கண்ணன் பேசும்போது, ‘’மோடி கோட்சூட் 15 லட்சத்துக்கு போடுறார். நேரு போட்டார் என்றால் அவர் பரம்பரை பணக்காரர். இந்த நாட்டுக்கு நேரு கொடுத்த அரண்மலை ரெண்டும் ஒவ்வொண்ணும் அப்பவே 3 கோடி ரூபாய் மதிப்பு பெறும்.  ஷேக் அப்துல்லா நேருவின் அப்பாவுக்கு பிறந்தவர் என அப்போதே எழுதினார்கள். ஷேக் அப்துல்லாவும், நேருவும் ஒன்று போல இருக்கிறார்கள். அதனால் தான் ஷேக் அப்துல்லாவை நேரு காப்பாற்றினார் என அப்போது எழுதினார்கள். 

சரி மெஹபூபா உங்கள் கூட்டணியில் தானே இருந்தது. அந்தப்பெண்ணையும் தூக்கி உள்ளே வைத்திருந்தது ஏன்? 370 ல் கைவைத்த உடனே ஆரம்பித்து விட்டார்கள். ஏனென்றால் அடுத்த தேர்தலில் நமக்கு ஓடு விழாது. அதற்கு இப்போதே ஏதாவது செய்தாகணும் என பாஜக ஆரம்பித்து விட்டது. 

எங்கள்லயும் பல முட்டாள்கள் இருக்கிறார்கள். காரணம் சாமினா அவன்களுக்கு ஒண்ணும் தெரியலையே. நித்யானந்தா சாமியை நான் தான் விரட்டினேன். 20 கோடி ரூபாய் கொடுத்து விட்டான். வேலூரில் இருந்து குப்புசாமி நாயர் வந்தார். வழக்கமா வந்தா எங்க வீட்டில்தான் தங்குவார். அப்போ வந்தவர் போன் செய்தார். என்னவென்று கேட்டேன். நித்யானந்தா 20 கோடி ரூபாய் கொடுத்து விட்டார் என சொன்னார். இப்போ எங்கே இருக்கீங்கனு கேட்டேன். ஜானகி ராம்ல இருக்கேன்னு சொன்னார். வராதியும் எங்க வீட்டில் ஆறு நாயையும் அவிழ்த்து விட்டிருக்கிறேன்னு சொல்லி தடுத்துட்டேன். 

 

20 கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். நாம என்ன ஓ.பி.பன்னீர்செல்வமா? அவரது சம்பந்தகாரரே 25 ஆயிரம் கோடி வைத்திருக்கிறார்
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!