ஆடியோவை அடுத்து வீடியோ மிரட்டலுக்கு தயாராகும் வெற்றிவேல் தரப்பு… எதையும் எதிர்கொள்ள ரெடியான அமைச்சர் ஜெயகுமார்!!

By Selvanayagam PFirst Published Oct 23, 2018, 9:32 AM IST
Highlights

அமைச்சர் ஜெயகுமார் இளம் பெண் ஒருவருடன் வைத்துக் கொண்ட தொடர்பால் ஆண் குழந்தை பிறந்துள்ளது என வதந்தி ரெக்கை கட்டிப் பறக்கும் நிலையில், நேற்று வெளியிடப்பட்ட ஆடியோ ஆதாரம் பெரும் சர்சச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் விரைவில் வெளியிட வெற்றிவேல் தரப்பு தயாராக உள்ளது என கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி  அமைச்சரவையில் மிக முக்கிய அமைச்சர் என்றால் அது ஜெயகுமார்தான். பத்திரிக்கையாளர்களை சந்திப்பது, முக்கிய முடிவுகள் எடுப்பது என இன்று வரை கோட்டையில் அவர் கொடி கட்டிப் பறக்கிறார்.

இதேபோல் பிரச்சனைகள் என்று தனது தொகுதி மக்கள் வந்துவிட்டால் அவர்களுக்கு நிச்சயமாக உதவிகளையும செய்வார் என்ற பெயர் அவருக்கு உள்ளது.  அமைச்சர் ஜெயகுமாரை சந்திக்க தொகுதி மக்கள் வந்துவிட்டால் அமைச்சர் வீட்டில் இருந்து ஒரு டோக்கன் கொடுக்கப்படும். அந்த டோக்கனை அவரது வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு ஹோட்டலில் கொடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம். இது அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.

இப்படி இருக்கும்போது தான் ஒருநாள் ஒரு பெண்ணும் அவரது அம்மாவும்  அமைச்சரிடம் உதவி கேட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யப்போய்தான் அமைச்சர் ஜெயகுமார் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப் பெண்னின் அம்மா . அமைச்சரிடம் பேசிய உரையாடல்தான் இப்போது வைரலாகி வருகிறது.

இந்தத் தகவல்கள் எப்படியோ கசிந்து தினகரன் காதுக்குப் போக... வெற்றிவேல் மூலமாக அந்தப் பெண்ணை கஸ்டடி எடுத்திருக்கிறார்கள் .. 3ஆவது மாதமாகக் குழந்தை வளர ஆரம்பித்ததில் தொடங்கி முழுக்கவே தினகரன் குரூப் கஸ்டடியில் அந்தப் பெண் இருக்கிறார். மருத்துவமனையில் செக் அப்புக்கு போகும் போதே அப்பா பெயரை ஜெயகுமார் எனத் தெளிவாகப் பதிவு செய்கிறார்கள்.

பத்து மாதத்துக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட்டில் ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழிலும் அப்பாவின் பெயர் ஜெயகுமார் என பதிவிட்டு மாநகராட்சியில் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள்.

இதை எப்போது வெளிடுவது என்பது குறித்து டிடிவி தரப்பினர் யோசித்துக் கொண்டிருந்போது, அண்மைக்காலமாக தினகரனை  அமைச்சர் சரமாரியாக தாக்கிப் பேசியது அவர்களை கடுப்பாக்கியுள்ளது.

இதையடுத்துதான் அந்த ஆடியோவை வெளிட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து வெற்றிவேல் தரப்பு வீடியோ ஆதாரம் ஒன்றையும்  வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்,  அவரது தாய் ஆகியோர் அமைச்சருடன் பேசும் அந்த வீடியோ அடுத்து அதிர்ச்சியைக் கிளப்பும் என வெற்றிவேல் தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் அமைச்சர் ஜெயகுமாரோ இதை முற்றிலும் மறுக்கிறார். தன் மேல் பொறாமை கொண்டுள்ள எதிர் தரப்பினர் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்கள் என்றும் இப்பிரச்சனை தொடர்பாக எதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும்  தில்லாக சொல்கிறார் அமைச்சர் ஜெயகுமார்

 

click me!