எத்தனை முறை மண்டியிடுவாய்..? மானங்கெட்ட மரணமே.. வேற இடத்த பாரு!! டுவிட்டரில் தெறிக்கவிடும் திமுக தொண்டர்கள்

Asianet News Tamil  
Published : Jul 30, 2018, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
எத்தனை முறை மண்டியிடுவாய்..? மானங்கெட்ட மரணமே.. வேற இடத்த பாரு!! டுவிட்டரில் தெறிக்கவிடும் திமுக தொண்டர்கள்

சுருக்கம்

netizens tweets about karunanidhi health

திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதிர்வின் காரணமாக அவ்வப்போது உடல்நலம் குறைவதும் பின்னர் சிகிச்சைக்கு பிறகு நலம் பெறுவதும் வழக்கமாக இருந்து வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி ஓய்வெடுத்து வந்தார்.

ஆனால் கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக அவரது உடல்நிலை வழக்கத்தை விட சற்று மோசமடைந்ததால், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் ஆகியோர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியை பார்த்தனர். ஸ்டாலினிடமும் மருத்துவர்களிடமும் உடல்நிலை குறித்து விசாரித்தனர். இதையடுத்து இன்று காலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில், கருணாநிதி உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என திமுக தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் மருத்துவமனை வாயிலில் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை அமைந்திருக்கும் பகுதியில் திரண்டுள்ளனர். 

கருணாநிதி உடல்நலம் பெற வேண்டும் அனைவரும் விரும்பும் வேளையில், அவர் நலமாகத்தான் இருப்பார்; அவருடன் போராடும் இயற்கையை வென்றுவிடுவார் என்பதை உணர்த்தும் வகையில் டுவிட்டரில் திமுக தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

திமுக தொண்டர் ஒருவரின் டுவிட்டர் பதிவில், எத்தனை முறைதான் மண்டியிடுவாய்.. ஏய் வெட்கங்கெட்ட மரணமே.. போய் வேற இடத்த பாரு என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">அந்த எமனை கொஞ்சம்<br>ஓய்வுஎடுக்க சொல்லுங்க<br><br>எப்பா நீ போய்ட்டு இன்னும்<br>5 வருடம் களித்துவா <br><br>அப்பயும் நாங்க சொன்னாதான்<a href="https://twitter.com/hashtag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#பொன்விழாத்தலைவர்கலைஞர்</a> <a href="https://twitter.com/hashtag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#கலைஞர்</a> <a href="https://twitter.com/hashtag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#கருணாநிதி</a> <a href="https://twitter.com/hashtag/KarunanidhiHealth?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KarunanidhiHealth</a> <a href="https://twitter.com/hashtag/Kalaignar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kalaignar</a> <br> <br>ஒன்ன அவளவு சீக்கிரம்<br>உட்டுரோவமா<br><br>I❤️கிலவா <a href="https://t.co/7cSaYTBeD2">pic.twitter.com/7cSaYTBeD2</a></p>&mdash; Murali Sudha DMK (@DmkSudha) <a href="https://twitter.com/DmkSudha/status/1023803997310791680?ref_src=twsrc%5Etfw">July 30, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

மற்றொருவரின் டுவிட்டர் பதிவில், வதந்திகளுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு குமரிக்கடல் வள்ளுவனை போல கம்பீரமாய் நிற்கிறார் கலைஞர் என பதிவிட்டுள்ளார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">வதந்திகளுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு குமரிக்கடல் வள்ளுவனை போல கம்பீரமாய் நிற்கிறார் கலைஞர்.<a href="https://twitter.com/hashtag/GetWellSoonKalaignar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#GetWellSoonKalaignar</a> <a href="https://twitter.com/hashtag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#கலைஞர்</a> <a href="https://twitter.com/hashtag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#கருணாநிதி</a></p>&mdash; Murali sai (@emurali39) <a href="https://twitter.com/emurali39/status/1023803540358057985?ref_src=twsrc%5Etfw">July 30, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

 

PREV
click me!

Recommended Stories

விஜய் ஒரு ஜீரோ.. நானும் உச்சத்தில் இருந்து தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.. தமிழிசை காட்டம்
வாயில் வடை சுடும் விஜய்.. வெறும் பில்டப் தான்.. தவெக காணாம போகப்போகுது.. செல்லூர் ராஜூ அட்டாக்!