எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் கிடைத்த நீதி இது. நிர்பயா தாயார் உருக்கம்..!!

By Thiraviaraj RMFirst Published Mar 20, 2020, 8:01 AM IST
Highlights

எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது என்று நிர்பயாவின் தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் அந்த 4 கொடூரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை காப்பற்ற ஒரு கும்பல் முயற்சி செய்தது.ஆனால் இந்திய தேசம் ,நீதியும் பெண்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்திருக்கிறது.இந்த தீர்ப்பு   இந்தியாவின் வரலாறு.
 

T.Balamurukan

"எனது நாடு நீதி"யை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது என்று நிர்பயாவின் தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் அந்த 4 கொடூரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை காப்பற்ற ஒரு கும்பல் முயற்சி செய்தது.ஆனால் இந்திய தேசம் ,நீதியும் பெண்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்திருக்கிறது.இது இந்தியாவின் வரலாறு.

நிர்பயா குற்றவாளிகள்  4  பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்கள். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து  நிர்பயாவின் தாயார் அளித்த பேட்டியில்.., 

"நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது. என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது.  எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது.இந்தியாவின் மகள்களுக்கான, அவர்களின் நீதிக்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம். நீதிக்கான எங்கள் காத்திருப்பு வேதனையாக இருந்தது, ஆனால் இறுதியாக எங்களுக்கு நீதி கிடைத்தது. எனது மகளின் புகைப்படத்தை நான் ஆரத்தழுவி கொண்டேன்” என்றார்.
 

click me!