கடைசி நாள் வேல் யாத்திரையில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்... தமிழக பாஜக ஏற்பாடு..!

By Asianet TamilFirst Published Dec 2, 2020, 8:39 AM IST
Highlights

திருச்செந்தூரில் நிறைவு பெறும் வேல் யாத்திரையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை கடந்த மாதம் 6-ஆம் தேதி அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடங்கியது. தொடர்ந்து மேற்கு, வடக்கு மாவட்டங்களில் வெற்றிவேல் யாத்திரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இடையில் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாகவும் அதன் மீட்பு பணிகளில் பாஜக நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் வெற்றிவேல் யாத்திரை நிறுத்தப்பட்டது.

 
நிவாரண பணிகள் காரணமாக யாத்திரை ரத்து செய்யப்பட்ட அறுபடை வீடுகளான சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் 5-ஆம் தேதி முருகனை தரிசித்து, 7-ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது. வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக பாஜக பொறுப்பாளரும் தேசிய பொது செயலாளருமான சி.டி.ரவி, தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.” என்று எல்.முருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

click me!