அமைச்சரின் அசிங்கத்தை ஈமெயிலில் அனுப்பிய பெண் நிருபர்... இருக்கும் கிடுக்குப்பிடி

By sathish kFirst Published Oct 13, 2018, 6:46 PM IST
Highlights

மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் அக்பருக்கு எதிராக பாலியல் புகார் வெளியான நிலையில், அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் நிருபர் ஒருவர் பகீரங்கமாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளர்.

மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் அக்பருக்கு எதிராக பாலியல் புகார் வெளியான நிலையில், அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் நிருபர் ஒருவர் பகீரங்கமாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளர்.

மீடூ பஞ்சாயத்துக்களில் சினிமா பிரபலங்களைத் தாண்டி தற்போது பத்திரிகை ஆசிரியர்களின் பெயர்களும் அடிபட ஆரம்பித்துள்ளன. தற்போது, மத்திய அமைச்சராக இருக்கும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பல முக்கிய பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து வந்துள்ளார். 

மீடூ ஹாஷ்டாக் மூலம் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், எம்.ஜே.அக்பர் மீது, பாலியல் புகாரை இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். இணை அமைச்ச்ர அக்பர் மீதான இந்த புகாரால், பிரதமர் மோடிக்கு கடும் நெருக்கடியைத் தெரிவித்துள்ளது. 

தற்போது, முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் பத்திரிகையாளர் ஒருவரும் அவர் மீது புகார் தெரிவித்துள்ளார். சிஎன்என் தொலைக்காட்சியின் பெண் பத்திரிக்கையாளர் மஜ்லியே புவே கம்ப் என்பவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு, 18 வயதாக இருக்கும்போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஏசியன் ஏஜ் என்ற பத்திரிக்கையில் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தார் மஜ்லியே. ஏசியன் ஏஜ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் எம்.ஜே.அக்பர். 

அப்போதுதான் இந்த துரதிர்ஷ்டவசமான  சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஹப்போஸ்ட் இந்தியா என்ற ஊடகத்திற்கு அந்த பெண் பத்திரிக்கையாளர் எழுதியுள்ள ஈமெயில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகும் புகைப்படம் ஒன்றை தேர்வு செய்வது எடிட்டர் பணி என்பதால் அக்பரிடம், எந்த படங்களை முதல் பக்கத்தில் பிரசுரிக்கலாம் என்பது குறித்து, சில படங்களை காட்டி முடிவை அறிய மஜ்லி, அக்பர் அறைக்கு சென்றாராம். அறைக்கு சென்றபோது உள்ளே சென்ற தன்னை அக்பர் பார்த்த பார்வையே சரியில்லை என்றும், தன் இருக்கைக்கு வந்து, தோள்பட்டையின்கீழ் கையை வைத்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்தது... அவரது நாக்கை என் வாய்க்குள் செலுத்தியது என்று மஜ்லி, இமெயிலில் தெரிவித்துள்ளார். 

அப்போது என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. எனது பெற்றோர் வெளிநாட்டு நிருபர்கள் என்ற வகையில், அக்பரிடம் தன்னை சேர்த்ததாகவும், அவரது இந்த செயலால் எனது நம்பிக்கை மட்டுமின்றி எனது பெற்றோரின் நம்பிக்கையையும் அக்பர் கெடுத்துக் கொண்டார் மஜ்லி கூறியுள்ளார்.

click me!