சுவர் ஏறிக் குதிச்ச பிறகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எப்படி எஸ்கேப் ஆனார் தெரியுமா?

By vinoth kumarFirst Published Nov 19, 2018, 4:21 PM IST
Highlights

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட வரும் அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை மக்கள் பல இடங்களிலும் மறித்து தங்களது ஆவேச எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் அதிக சேதாரத்திற்கு ஆளாகிவருபவர் உள்ளூர் அமைச்சரான ஓ.எஸ்.மணியன்.

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட வரும் அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை மக்கள் பல இடங்களிலும் மறித்து தங்களது ஆவேச எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் அதிக சேதாரத்திற்கு ஆளாகிவருபவர் உள்ளூர் அமைச்சரான ஓ.எஸ்.மணியன்.

நேற்று வேதாரண்யம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் மக்கள் மிகவும் ஆத்திரமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து அமைச்சர் சுவர் ஏறித் தப்பி ஓடிய காட்சிகள் முகநூல் பதிவுகள் இன்றைய நாளிதழ் தலைப்புகள் வரை வந்து மானத்தை வாங்கின.

’குற்றம் நடந்தது என்ன?’ பாணியில் சுவர் ஏறி குதித்த அமைச்சர் அடுத்து என்ன ஆனார் என்று மக்களுக்கு அம்பலப்படுத்துவதற்காகவே ஒரு செல்போன், வீடியோ எடுத்தபடி அமைச்சரைத் துரத்தியிருக்கிறது.

சுமார் 85 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், தனது காரை விட்டுவிட்டு டூ வீலர் ஒன்றில் அமைச்சர் எஸ்கேப் ஆவதும், அதையும் மீறி மக்கள் அமைச்சரை வழிமறித்து வறுத்து எடுப்பதும் பதிவு செய்யப்பட்டு, அந்த வீடியோ இப்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது. எங்கே போனாலும் இப்பிடியாய்யா கேமராவைத் திருப்புவீங்க?

click me!