பகீரென பற்றிக் கொண்ட பழைய நினைப்பு.. நெடுஞ்சான்கிடையாய் கீழே விழுந்து வணங்கிய அமைச்சர் ஜெயக்குமார்..!

Published : Jul 03, 2019, 03:34 PM ISTUpdated : Jul 03, 2019, 03:39 PM IST
பகீரென பற்றிக் கொண்ட பழைய நினைப்பு.. நெடுஞ்சான்கிடையாய் கீழே விழுந்து வணங்கிய அமைச்சர் ஜெயக்குமார்..!

சுருக்கம்

மக்கள் விரும்பாத திட்டங்களுக்கும் தமிழக அரசு ஒருபோதும் ஆதரவு அளிக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்கள் விரும்பாத திட்டங்களுக்கும் தமிழக அரசு ஒருபோதும் ஆதரவு அளிக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

சென்னை ராயபுரத்தில் உள்ள கே.சி. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தான் படித்த பள்ளி என்பதால் மேடையிலேயே மண்டியிட்டு வணங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார் வகுப்பறைக்கு சென்று பாடம் நடத்தினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பாத திட்டங்களுக்கும் தமிழக அரசு ஆதரவு அளிக்காது. தனிமரம் தோப்பாகாது என்ற நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இருக்கிறார். கருவேல மரம் போன்ற தினகரன் எதற்கும் பயன்பட மாட்டார் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!