அமைச்சர் ஜெயக்குமார் ஒரு PlayBoy..!மரண கலாய் கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Aug 10, 2020, 11:59 AM IST
Highlights

அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் இடையேயான காமெடி கலாட்டாதான் தற்போதைய தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் இடையேயான காமெடி கலாட்டாதான் தற்போதைய தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வகித்து வந்த சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி காலியானதால், அங்கே பொறுப்பாளராக கட்சியின் சீனியர் ஒருவரை நியமிக்க வேண்டுமென கட்சியின் சீனியர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.  ஆனால், சீனியர்கள் கோரிக்கையைப் புறக்கணித்துவிட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளராக, உதயநிதிக்கு நெருக்கமான இளைஞரணி சிற்றரசு நியமிக்கப்பட்டார். 

இதனால், அதிர்ச்சியடைந்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணையபோவதாக தகவல்கள் வெளியானதையடுத்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில்,  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து பேசுகையில், சாக்லேட் கொடுத்து எம்.எல்.ஏ கு.க.செல்வத்தை ஏமாற்றி இருக்கிறார்கள் என குறிப்பிட்டு கூறியிருந்தார்.

இதுகுறித்து அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எம்எல்ஏ கு.க. செல்வத்தை சாக்லேட் கொடுத்து ஏமாற்றியதாக கூறியவர் ஒரு சாக்லேட்பாய் என உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் 'சாக்லேட்பாய் என்பது ஒன்றும் பெரிய தவறான விஷயம் அல்ல. ஆனால், சாக்லேட்பாய் என சொன்னவர் பிளேபாய் என கலாய்த்துள்ளார்.

click me!