முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயில் கட்டுற வேலைக்கு போங்க... மாயாவதி டென்ஷன்..!

Published : Oct 02, 2020, 06:26 PM IST
முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கோயில் கட்டுற வேலைக்கு போங்க... மாயாவதி டென்ஷன்..!

சுருக்கம்

உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் முதல்வர் ஆதித்தியநாத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார்

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராமர் கோயில் கட்டும் பணியை செய்யலாம் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹத்ராஸ் சென்ற பகுதியில் 19 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநிலத்தின் முக்கிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் முதல்வர் ஆதித்தியநாத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

PREV
click me!

Recommended Stories

Jantar Mantar Protest: 'ஹிட்' அடிச்சாலும் சாகாத கரப்பான் பூச்சிகள் நாங்கள்! - தலை நகரில் போராட்டம்
Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!