போகும் இடமெல்லாம் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு... திமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Jan 7, 2021, 3:06 PM IST
Highlights

மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் நடத்துவதற்கு கால அவகாசத்தை நீட்டித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் நடத்துவதற்கு கால அவகாசத்தை நீட்டித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் கடந்த டிச.23 முதல் மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பல கிராமங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்தக் கூட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று வருகிறார். இந்தக் கூட்டங்கள் வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் என, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் நடத்த வரும் 20ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- "2020 டிசம்பர் 23 முதல் 2021 ஜனவரி 10 வரை தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 500 'மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள்' நடத்திட வேண்டுமென, மாவட்ட, மாநகர திமுக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில், எடுத்த முடிவின்படி தமிழகம் முழுவதும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.

மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள், சில மாவட்டங்களில் பெருமழையின் காரணமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டுமென்றும் மாவட்டச் செயலாளர்கள் வைத்த கோரிக்கையினையேற்று, 2021 ஜனவரி 20ஆம் தேதி வரை 'மக்கள் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள்' நடத்திட கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!