இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார் , மத்திய பிரதேசம் போன்ற சூழ்நிலை மகாராஷ்டிராவில் இல்லை, மகா விகாஸ் அகாடி கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது .
மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும், மத்திய பிரதேசத்தில் நுழைந்ததுபோல வைரஸ் கிருமி மராட்டியத்தில் நுழையாது என சஞ்சய் ராவத் கூறினார் . மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த நிலையில் , திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது அந்த கட்சியை சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் . இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சிவசேனா மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் , இந்தப்பிரச்சினையை கரோனா வைரசுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார் . அதில் மத்திய பிரதேசத்தில் நுழைந்திருக்கும் வைரஸ் மகாராஷ்டிராவில் உள்ளே நுழையாது , மகாராஷ்டிராவில் நடந்துவரும் ஆட்சி வித்தியாசமானது . 100 நாட்களுக்கு முன்னர் ஒரு அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்தது , இதையடுத்து மகா விகாஸ் அகாடி பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மாகாராஷ்டிராவை காப்பாற்றியது . சிவசேனா கூட்டணி அரசு பாதுகாப்பாக உள்ளது எனக் கூறினார்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார் , மத்திய பிரதேசம் போன்ற சூழ்நிலை மகாராஷ்டிராவில் இல்லை, மகா விகாஸ் அகாடி கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது . அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது , உண்மை என்னவென்றால் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக ஊடகங்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை, அப்படியென்றால் எல்லாம் சரியாக நடக்கிறது என்றுதானே அர்த்தம் என்றார் அவர்.