கமல் விசிட் எதிரொலி... எண்ணூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்..! களமிறங்கிய கலெக்டர்..!

 
Published : Oct 28, 2017, 10:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
கமல் விசிட் எதிரொலி... எண்ணூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்..! களமிறங்கிய கலெக்டர்..!

சுருக்கம்

kamal visit impact collector assured for action in ennore

சென்னை எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்கள், சாம்பல் கொட்டுவதாக கமல் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வெள்ள பாதிப்பு இருப்பதாகவும் கமல் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றை பார்வையிட்ட கமல், மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். இதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத அப்பகுதி மக்கள், கமலிடம் தங்களது குறைகளை கூறிவிட்டதால், தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கமல் பார்வையிட்டதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, எண்ணூர் துறைமுக கழிமுக பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்படும் எனவும் 200-க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கமல் விசிட் அடித்தாலே ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பதறி அடிக்கும் நிலை உள்ளதை உணரமுடிகிறது.
 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..