ரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு முக்கிய பதவி... அடித்தது லக்..!

Published : Jan 21, 2021, 07:13 PM IST
ரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு முக்கிய பதவி... அடித்தது லக்..!

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிறுபான்மையினர் நல பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிறுபான்மையினர் நல பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பினால் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விரும்பும் கட்சியில் அணைந்து கொள்ளலாம் என கடந்த 18ம் தேதி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் மற்றம் நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். 

இந்நிலையில், ரஜினி மன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட 4 மாவட்ட செயலாளர்கள் நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?! திருவிழா கோலத்தில் நீலாங்கரை.!!!
TVK Vijay : 100 கோடி சொத்தை மறைத்து முறைகேடு செய்த தவெக விஜய் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!